விரிந்த இதழ் மணம் வீச
விரைநறுந்தேன் தான் பூசச்
சொரிந்தநகைப் பூவுதிர்த்துச்
சுகமஞ்சம் ஆக்கிவைத்தாய்
சுகமஞ்சக் கால்தாங்கும்
சொக்கணையில் சுரும்பாடும்
புகநாடும் அகவண்டு
பூவிரியத் தேனுண்டு
குகையெங்கும் கொள்ளையின்பப்
புதைபொருளாய்ப் பூரிக்கும்
மிகைநடுக்கும் உட்சுழலில்
அகப்பட்ட உயிர்தழைக்கும்
உயிர்தழையும் சேதியினை
ஊதிவரும் களிவண்டு
அயிர்க்கும் உளப்போதலர்த்தி
அடிக்காம்பில் தேன்சிலிர்க்கும்
தேன்சிட்டு தானழைக்க
வான் தொட்டு முத்தமிடும்
கானுக்குள் கன்னிமலை
கம்பலையில் களியாடும்
அம்பலத்தில் ஆடுகின்ற
ஆதிதாளம் அகத்தாழம்
செம்புலத்தில் பெயல்நாடிச்
சீவப்புலம் சிவிறியெழும்.
சுபமாய்ப் பிறந்த எழில்
சுந்தரமாய்த் தான் வளரும்
தவமாய்த் தன் வாழ்வாகித்
திசையெங்கும் நாடியெழும்.
***
No comments:
Post a Comment