காடுறையும் பூவிரியாள்
மன்னிநிதம் காக்கும்
மட்டுவார் குழலி
உன்னி உணர்ந்தோர்க்கு
உவட்டாத மாயத்தாள்
பன்னிநிதம் பயின்றாலும்
பேதைமையாய் நமை ஆக்கும்
விண்ணீல மேனியாள்
விரிகதிர் வார்குழலி
எண்ணுக்கும் எட்டா
எழில்பொங்கும் கண்ணோக்கில்
அழிப்பாளோ அளிப்பாளோ
அன்னையின் காலடியில்
அரண் தேடும் சேயன்றோ
விழிகாலும் அழல்காளீ
அழித்தாலும் நின்னடிகள்
அளித்தாலும் புகல்தாமே.
***
No comments:
Post a Comment