Friday, January 31, 2020

மனத்தின் குரல்கள்

திருக்குறளுக்கு ஆழ அகலமான ஓர் உரை செய்
என்றது மனத்தில் ஒரு குரல்
அரிஸ்டாட்டிலை முழுக்கவும் தமிழில் கொண்டுவா
என்றது ஒரு குரல் மனத்தில்
அயின்ராண்டின் தத்துவ நுணுக்கம் பற்றி விரிவாக எழுது என்றது மற்றும் ஒரு குரல்
வேத நூல்களில் ஆராய்ச்சியில் இறங்கு
கிரேக்கம் முதலிய உலக தத்துவப் பள்ளிகளை ஒப்பாய்வு செய்
உன்னுடைய தத்துவ இயல் நூலை எழுதிமுடி
இப்படி
இப்படி
இப்படி
...............
குரல்களின் தொல்லை அதிகமாகவே...
எப்படா வெயில் சாயும் என்று பார்த்து
வெளியில் நடக்கப் போய்விட்டேன்
நிம்மதி
அலுக்கச் சலிக்க நடந்துவந்துவிட்டால்
இரவு நன்கு தூங்கிவிடலாம்
இனிமேல் தொல்லை
நாளைக்குத் தானே
பார்த்துக் கொள்ளலாம்
இன்றைய பாடு இன்றைக்கு
இளமையில் என்னுடன் கோலி விளையாடிய
நண்பனை இன்று பார்த்தேன்
கவலையே இல்லாமல்
சிரித்துக் கொண்டிருந்தான்
நீ கொடுத்து வைக்கலையே ரங்கா!
பாரதியைப் படித்தாய்...
இப்படித்தான்..போ..
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment