மனக்கேதம் மாற்றித் தடுத்தாண்டு கொண்டாய்
தினம்பூத்துத் திகழ்கின்ற மலராகி நின்றாய்
வனம்பூத்த அரவிந்த மணமாகி நின்றாய்
அநவரதம் அரவிந்த மலர்நாடும் வண்டாய்
உனைச்சுற்றி வலமாரும் உள்ளத்தில் நின்றாய்
எனைப்பற்றி வரும்குற்றம் எவ்வண்ணம் பொறுத்தாய்
அன்புக்கும் அருளுக்கும் வடிவான நீ தாய்.
***
***
No comments:
Post a Comment