Friday, November 17, 2017

நீ தாய்

மனக்கவலை மாற்றும் மருந்தாகி வந்தாய் 
மனக்கேதம் மாற்றித் தடுத்தாண்டு கொண்டாய் 
தினம்பூத்துத் திகழ்கின்ற மலராகி நின்றாய் 
வனம்பூத்த அரவிந்த மணமாகி நின்றாய் 
அநவரதம் அரவிந்த மலர்நாடும் வண்டாய் 
உனைச்சுற்றி வலமாரும் உள்ளத்தில் நின்றாய் 
எனைப்பற்றி வரும்குற்றம் எவ்வண்ணம் பொறுத்தாய் 
அன்புக்கும் அருளுக்கும் வடிவான நீ தாய்.

***

No comments:

Post a Comment