Friday, November 17, 2017

வெண்ணை திருடி

உதையென்றார் ஓர்புலவர் உன்னதமாம் என்றே
அதையொப்பித் தாம்மகிழ்வார் ஆங்கே - கதையில்சீர்க்
கண்ணனுக்கே இவ்வகைக் காலித் தனமெல்லாம் 
உண்டாகு மென்றே யுணர்.
*
உதைவாங்கும் ஓர்புலவர் உள்ளத்து தைத்தே
விதையாகி வந்தெழுந்த பாவாய்ச் - சுதையாகி
நின்றாலும் நீள்கழல் நீட்டி அளந்தாலும்
கன்றின்பின் போவான் கழல்.
*
முன்னந் தொழுது முயன்றீண்டு வந்திட்டுக்
கன்னத்தில் வாங்கக் கசக்குமோ - என்னப்பன்
கன்னமிட்டென் கள்ள உளத்தைக் களவாடிப்
பின்னுந்தன் பேர்பொறித்தக் கால்.
*
வாம்பரி யூரும் வலனது தேரினும்
தாம்பரி சென்றே தமிழுகப்பார் - ஆம்பரி
சேவஃ தான்ற சுகமது பூன்றநல்
பூவது பூரண மே.
*
வெண்ணை திருடி விளங்குபா வைதிருடி
வெண்பாவை ஏன்திருடான் சொல்.
***

No comments:

Post a Comment