Friday, November 17, 2017

அன்னையின் அருட்கரம்

அன்னையே! 
வாழ்வின் நிலையாமையைப்
புரிந்துகொள்ளும்போது
துணுக்கென்கிறது.
மரணம் என்பது எத்தகையதோ என்று
உள்ளம் பேதலிக்கிறது.
அனைத்தும் இல்லாமல் போம் நிலையை
நினைத்து சர்வ நாடிகளும் அஞ்சுகின்றன.
காணும் இவ்வுலகின் துன்பங்களோ பலப்பல
ஆயினும் காணா நிலையின்
அனைத்தும் இல்லாமல் போகும்
அந்தச் சூனியம்...
நினைத்தாலே நடுங்குகின்றது தாயே!
இதில் அகங்காரம், ஆசை, ஆணவம்
கோபம், தீமை என்று இந்தக் கொடுமைகளை
நினைத்தாலே நடுங்குகின்றது;
இந்த அனைத்துவித பயங்களையும் போக்கிச்
சத்யமான, நித்யமான நிம்மதியைத் தர
உன்னையன்றி எனக்கு யாருளர் தாயே!
உன்னைச் சரணடைந்தேன்;
உன் பதமலர்கள் காப்பு. 

***

No comments:

Post a Comment