தனக்குக் கெடுதலையும்
உற்சாகமாகப் போய் மேல்விழும்;
பைத்தியம் தன் நிலையில் இருக்காது
என்ன செய்கிறோம் என்று அறியாது
ஏதோ செய்து ஏளனத்திற்கு இலக்காகும்;
குடிகாரர் தம் துன்பம் தீர என்று
ஏதோ உண்டு தம் பெருமை அழிவார்;
நோயாளி தான் உணர்ந்தாலும்
பலஹீனத்தால் பயனற்ற நிலையில் இருப்பார்;
கட்டப்பட்டவர் தம் ஆற்றல் வீணாக
விடுதலை இன்றி மனம் நோவார்;
இவை ஓரொன்றுமே கொடுமை தாயே!
இவை அத்தனையும் கலந்த நிலை என் நிலை;
நீ அருள் செய்தால்
நீ அருள் செய்தால் மட்டுமே
வாழ்வு உண்டு கருணை செய் அம்மா!
***
நீ அருள் செய்தால் மட்டுமே
வாழ்வு உண்டு கருணை செய் அம்மா!
***
No comments:
Post a Comment