Friday, November 17, 2017

அறியாக் குழந்தை

குழந்தை அறியாது 
தனக்குக் கெடுதலையும் 
உற்சாகமாகப் போய் மேல்விழும்; 
பைத்தியம் தன் நிலையில் இருக்காது 
என்ன செய்கிறோம் என்று அறியாது 
ஏதோ செய்து ஏளனத்திற்கு இலக்காகும்; 
குடிகாரர் தம் துன்பம் தீர என்று 
ஏதோ உண்டு தம் பெருமை அழிவார்; 
நோயாளி தான் உணர்ந்தாலும் 
பலஹீனத்தால் பயனற்ற நிலையில் இருப்பார்; 
கட்டப்பட்டவர் தம் ஆற்றல் வீணாக 
விடுதலை இன்றி மனம் நோவார்; 
இவை ஓரொன்றுமே கொடுமை தாயே! 
இவை அத்தனையும் கலந்த நிலை என் நிலை; 
நீ அருள் செய்தால்
நீ அருள் செய்தால் மட்டுமே
வாழ்வு உண்டு கருணை செய் அம்மா!

***

No comments:

Post a Comment