காலையெழுந்ததும்
காதில் விழுந்தது
கிளையில் எங்கோ கூவும்புள்
மாலைவரும்வரை
மனத்தில் நிற்கும்
மாயக்குரலொடு கூவும் புள்
சோலைவெளியில்தான்
சொக்கிருட்டில் எங்கோ
சோம்பல் முறித்து அந்தப் புள் கூவும்
பாலைவெயிலினிப்
பரிதவிக்கும் உயிர்
பக்குவமாகத் துயில்முறிக்கும்
மூலைகிழக்கினில்
மூர்க்கமுடன் முந்தி
முனைந்துவரும் அந்தக் கதிரவனார்
கோலெங்கும் ஓச்சிக்
காய்த்துவிட்டுக் கண்ணை
மேலைத் திசையினில் தாம் மூட
மேலைவான்வெளி
எங்கெங்கோ திரிந்தபின்
கங்குல்வந்த கிளைப் புள்கூவும்.
***
No comments:
Post a Comment