Saturday, November 18, 2017

காலைப் புள்

காலையெழுந்ததும்
காதில் விழுந்தது
கிளையில் எங்கோ கூவும்புள் 

மாலைவரும்வரை
மனத்தில் நிற்கும்
மாயக்குரலொடு கூவும் புள் 

சோலைவெளியில்தான்
சொக்கிருட்டில் எங்கோ
சோம்பல் முறித்து அந்தப் புள் கூவும் 

பாலைவெயிலினிப்
பரிதவிக்கும் உயிர்
பக்குவமாகத் துயில்முறிக்கும் 

மூலைகிழக்கினில்
மூர்க்கமுடன் முந்தி
முனைந்துவரும் அந்தக் கதிரவனார் 

கோலெங்கும் ஓச்சிக்
காய்த்துவிட்டுக் கண்ணை
மேலைத் திசையினில் தாம் மூட 

மேலைவான்வெளி
எங்கெங்கோ திரிந்தபின்
கங்குல்வந்த கிளைப் புள்கூவும். 

*** 

No comments:

Post a Comment