Saturday, November 18, 2017

வாழ்வின் பொருள்

நீர் என்ற ஒன்று
இல்லாதாயின்
நிலம் காயும் 

நிலம் என்ற ஒன்று
காய்ந்தால் அந்த
வான் பெயுமோ? 

வான் என்ற ஒன்று
பாழே ஆயின்
அருள் எங்கே? 

அருள் என்ற ஒன்று
வறண்டதாயின்
வாழ்வெங்கே? 

வாழ்வென்ற ஒன்று
இல்லாதாயின்
உலகெங்கே? 

உலகென்ற ஒன்று
இருக்கும்வரையில்
விடையெங்கே? 

விடையென்ற ஒன்று
கிட்டும்வரையில்
தேட்டம் இங்கே 

தேட்டம் என்ற ஒன்று
தொடரும்வரையில்
பொருள் இங்கே. 

*** 

No comments:

Post a Comment