Saturday, November 18, 2017

அன்னையே அடைக்கலம்

அன்னையே
எனை மறந்து உனை மறந்து
வினை கரந்த விழலாய்
வாழ்க்கை ஓய்வதற்கோ
தினம் விழித்து எழுந்து
அனம் உண்டு திரிந்து
பிணம் ஆகு முன்னே
நிணம் ஆடு பிரேதமாய்
குணம் பல துறந்து
மனம் பல பரந்து
முனம் கற்ற கல்வியும்
சினம் படக் கழிந்து
எனை உற்ற பேரெலாம்
என்னிவன் எனப்பழித்து
ஒருநாள் விழுந்திடவோ
ஒவ்வொரு நாளும்
எனை விழிக்க வைப்பையோ
அன்றியுன் உணர்வில்
செழிக்க வைப்பையோ
அனைத்தும் உன் பரமே
அன்னமாய்ப் பரத்தினில்
முன்னம் முகிழ் முதலே
என்றும் உன் அடைக்கலமே !


***



No comments:

Post a Comment