அன்னையே
எனை மறந்து உனை மறந்து
வினை கரந்த விழலாய்
வாழ்க்கை ஓய்வதற்கோ
தினம் விழித்து எழுந்து
அனம் உண்டு திரிந்து
பிணம் ஆகு முன்னே
நிணம் ஆடு பிரேதமாய்
குணம் பல துறந்து
மனம் பல பரந்து
முனம் கற்ற கல்வியும்
சினம் படக் கழிந்து
எனை உற்ற பேரெலாம்
என்னிவன் எனப்பழித்து
ஒருநாள் விழுந்திடவோ
ஒவ்வொரு நாளும்
எனை விழிக்க வைப்பையோ
அன்றியுன் உணர்வில்
செழிக்க வைப்பையோ
அனைத்தும் உன் பரமே
அன்னமாய்ப் பரத்தினில்
முன்னம் முகிழ் முதலே
என்றும் உன் அடைக்கலமே !
***
No comments:
Post a Comment