Friday, November 17, 2017

காலையில் தொடக்கம்

பத்தியில்லை நல்லறிவும் பக்குவமும் தானில்லை
புத்தியில்லைப் பூரணத்தை நாடிடவே - எத்திக்கும்
தான்பறந்து தானோய்ந்து தன்னிடமே மன்னுகின்ற
ஊன்தோயும் ஓர்புள்ளோ நான். 

காலையில் பொழுதுவிடிந்தும் தூங்கிவிட்டு, 
மெள்ள எழுந்து,
கொஞ்சமாக வெட்கத்தோடு 
பகவந் நாமாவைச் சொல்லிவிட்டுக் 
காலைத் தயார்களை முடித்து, 
ஒரு டீயோ, காப்பியோ சாப்பிடும் பொழுது
பார்க்கும் சூரிய வெளிச்சம் .... 
ஒரு தனி...உவகைதான். 
இந்தச் சொர்க்கம் மட்டும் 
எனக்கு நிரந்தரமாக்கு கடவுளே ! 
வாக்கும் மனமும் விளங்கும் செயலுமே
ஆக்கம் சிறக்கும் அருளும் பூக்கும்
கணபதியைக் கும்பிட்டக் கால். 

*** 

No comments:

Post a Comment