Friday, November 17, 2017

சிறு குழந்தை

சிறு குழந்தை
கரிய இருள்
கண் திறக்காத நிலை
அன்னையை எங்கோ
இருப்பதாய் முகர்வில்
தேடி அழும்
கை கால் பரவும்
இதற்கிடையில்
ஏதேனும் கவனம் ஈர்க்கும்
சிரிக்கும்
சலிக்கும்
மீண்டும் அழும்
எங்கோ இங்குதான்
அவள் இருக்கிறாள்
என எண்ணி
தான் கிடக்கும் விரிப்பின்
நுனியையே எடுத்துப் பற்றும்
இல்லையென உணர்ந்ததும்
வீறிடும்
பீதியில் கழியும்
விதி வழி படரும்
விரல் வழி ஒழுகும் எச்சில்
என் நிலை
என்றைக்குமாய்
இப்படியே இருப்பது
அழகா உனக்கு
அன்னையே! 

*** 

No comments:

Post a Comment