Saturday, November 18, 2017

சர்க்கரை போடாத தேநீர்

சர்க்கரை போடாத தேநீர் 
நன்றாகத்தான் இருக்கிறது. 
ஏதோ அதன் புண்ணியத்தில் 
ஓர் எண்ணம் நிச்சயப்பட்டு எழுந்தது. 
நாம் உண்மையில் வாழவில்லை.
இது வாழ்க்கையில்லை.
பிணத்தைக் குதிரையேறிச் சவாரி செய்து கொண்டிருக்கிறோம்.
இந்த உடலையே நாம் என்று எண்ணித் தூக்கிச் சுமக்கிறோம்.
இடுகாட்டிற்குச் சற்று நேரம் முன்வரையில்.
என்று பிணத்தை நாமாக மயங்கிய 
இந்தச் சவாரியை நிறுத்துகிறோமோ
குறைந்தபட்சம் இந்த உடல் இது நாம் இல்லை
என்றாவது ரோசம் வந்து 
மனத்தால் இதனோடு படுத்துப் புரள்வதை
வெட்டிவிடுகிறோமோ அன்றுதான்
நாம் நம் உண்மை இயல்பு என்ன என்று உணரத் தொடங்குகிறோம்
அன்றே உண்மையான நித்திய வாழ்க்கையும் ஆரம்பம். 

பிணத்தொடு கூடிப் பிணக்கென வாடி
இணங்கும் இதுவோ இயல்பு - சுணக்கறத்
தேகம்நான் என்ற நசையறத் தானுணர்தல்
ஏகவாழ் வாகும் இயல்.


***

No comments:

Post a Comment