Friday, November 17, 2017

கனிந்தருள்வாள் காளீ

கனிந்தருள்வாள் காளி கலந்துள்ளம் அன்பால்
தினம்பாடி நாம்தொழுவோம் தாள்கள் - குணம்நாடிக்
குற்றம் விலக்கிக் குலசக்தி தாளிணையே
சுற்றமெனக் கொள்வோம் நனி. 


துவந்துவங்கள் என்னைத் தொடராமல் காப்பாள்
பவம்தீர்ப்பாள் பக்தி தருவாள் - திவம்தந்து
மன்னுயிரைப் பொன்னுயிராய் மீட்டே மரணமெனும்
சென்மநோய் தீர்க்கும் மருந்து. 


தானுக்குள் தானிருப்பாள் தாயவளே நற்புகலாம்
வானிலும் மண்ணிலும் காப்பு. 


அறிவு போல் தோன்றும் அறியாமை
அம்ம அம்ம ...
கொடிதிலும் கொடிது.
நாணமே மிஞ்சுகிறது என்னுள். 


இசைந்து பிரபஞ்சம் ஈன்றாள் இயன்ற
நசையால் நமக்காக வென்று. 

***

No comments:

Post a Comment