தினம்பாடி நாம்தொழுவோம் தாள்கள் - குணம்நாடிக்
குற்றம் விலக்கிக் குலசக்தி தாளிணையே
சுற்றமெனக் கொள்வோம் நனி.
*
துவந்துவங்கள் என்னைத் தொடராமல் காப்பாள்
பவம்தீர்ப்பாள் பக்தி தருவாள் - திவம்தந்து
மன்னுயிரைப் பொன்னுயிராய் மீட்டே மரணமெனும்
சென்மநோய் தீர்க்கும் மருந்து.
*
தானுக்குள் தானிருப்பாள் தாயவளே நற்புகலாம்
வானிலும் மண்ணிலும் காப்பு.
*
அறிவு போல் தோன்றும் அறியாமை
அம்ம அம்ம ...
கொடிதிலும் கொடிது.
நாணமே மிஞ்சுகிறது என்னுள்.
*
இசைந்து பிரபஞ்சம் ஈன்றாள் இயன்ற
நசையால் நமக்காக வென்று.
***
No comments:
Post a Comment