புணையெனக் காக்கும்
துணையாகும் பவக்கடல்
அணையாகும் கடக்கவே.
கடக்க அரும் கடுவினைகள்
அடக்கியெழும் நின்னருளால்
மடங்கிவிழும் என்வாழ்க்கை
மடலவிழும் மொட்டலரும்.
அலமந்த வாழ்க்கையினில்
புலம்தெரி பொன்னொளியே!
நலம்பொழியும் நாயகியே!
வலம் அருள்வாய் மஹாசக்தீ!
சக்திப்பதமே சரணென்ற
பக்தியருள்வாய் பரதேவீ!
முக்தியுருவே! மூலப்பொருளே!
புக்திவடிவே பரம்பொருளே!
பொருளிலா வாழ்வாய்ப்
புன்மையில் தோய்ந்தே
கருத்திலா தலைந்தேன் - நின்
கழல்தனை அடைந்தேன்
வருத்தங்கள் மாற்றி
அர்த்தங்கள் காட்டிப்
பொருத்தினை என்னை - நின்
பொன்னடி நிழலே.
நிழலும் வெயிலுமாய்
நில்லா வாழ்க்கையில்
அழலும் என் நெஞ்சு
ஐயகோ எனென்பேன்!
தண்ணளிக் கடலாம்
தளிர்மென் பாதம்
கண்ணொளிக் காப்பெனக்
காட்டினை வாழி!
வாழி என் தெய்வமே!
ஆழியுள் துரும்பெனப்
பாழிருள் ஆகப்
போகாது காத்துச்
சூழருள் வலயம்
சச்சிதாநந்த
வாழ்வினில் பொருத்தினை
வாழி வாழி நீ!
*
அன்னை உன் பாதம்
அடைக்கலம் என்றும்
சிந்தையில் ஒளியாய்ச்
சந்ததம் நிற்பாய்
என்னுளம் உன்னருள்
என்றும் சூழ்ந்திடவே
உன்னித் தொழுவேன் - நின்
பதமலர் இணையே.
*
அடைக்கலம் என்றும்
சிந்தையில் ஒளியாய்ச்
சந்ததம் நிற்பாய்
என்னுளம் உன்னருள்
என்றும் சூழ்ந்திடவே
உன்னித் தொழுவேன் - நின்
பதமலர் இணையே.
*
தூய பெரும்சுடரைத் தொல்லுலகை ஈன்றவளைத்
தாய்மைத் தவவுருவைத் தானேயாம் - சேய்மைப்
பரத்துவமாய் ஆனாளைப் பூரணியைப் பொன்னார்
நிறத்தாளை நாடும் மனம்.
*
தாய்மைத் தவவுருவைத் தானேயாம் - சேய்மைப்
பரத்துவமாய் ஆனாளைப் பூரணியைப் பொன்னார்
நிறத்தாளை நாடும் மனம்.
*
புதுமலராக என் உள்ளம் - நின்
பதமலர்க்காகுக திண்ணம்
மதிமிகு நுட்பங்கள் தூபம் - நின்
துதிகற்க ஆகுக வண்ணம்
கதிதனை உரைத்திடும் வாக்கும் - நின்
வழிபாட்டினில் எழுந்திடும் தீபம்
பதியுமென் நெஞ்சம் புகழ்சரிதம் - நின்
பரரூபத்தில் தஞ்சம் அடையும் நிதம்.
*
அன்னை பதங்கள் தோயும் உள்ளம்
மன்னவேண்டும் என்றும் என்றும்
உன்ன உன்ன உணர்வுள் ஓங்கும்
உன்னதமே நிலவும் நித்தம் நித்தம்
பன்னற்கரிய பெருமை விஞ்சும்
பரத்தின் மகிமை விஞ்சும் விஞ்சும்
உண்மை உணர்வின் உவகை துஞ்சும்
உருவே உலகின் அன்னை வாழி !.
பதமலர்க்காகுக திண்ணம்
மதிமிகு நுட்பங்கள் தூபம் - நின்
துதிகற்க ஆகுக வண்ணம்
கதிதனை உரைத்திடும் வாக்கும் - நின்
வழிபாட்டினில் எழுந்திடும் தீபம்
பதியுமென் நெஞ்சம் புகழ்சரிதம் - நின்
பரரூபத்தில் தஞ்சம் அடையும் நிதம்.
*
அன்னை பதங்கள் தோயும் உள்ளம்
மன்னவேண்டும் என்றும் என்றும்
உன்ன உன்ன உணர்வுள் ஓங்கும்
உன்னதமே நிலவும் நித்தம் நித்தம்
பன்னற்கரிய பெருமை விஞ்சும்
பரத்தின் மகிமை விஞ்சும் விஞ்சும்
உண்மை உணர்வின் உவகை துஞ்சும்
உருவே உலகின் அன்னை வாழி !.
*
மாயை என்னைச் சூழும்போது
மாதா உன்னை நினைக்க வேண்டும்
தூய்மை என்னுள் துலங்கும்போது
தாயே உன்னைப் புகழவேண்டும்
பொய்மை இருளில் மிரளும்போது
பெற்றவள் நீ காக்க வேண்டும்
வாய்மைக் கதிரே விளங்கும்போது - என்
வாழ்வில் நீயே திகழ வேண்டும்.
***
No comments:
Post a Comment