தரிசனம் ஆன
மண்டபத்தில்
கடவுள் அர்ச்சகர்
பெண்கள் என்ற
முக்கோணத்தில் சுழலும் தரிசனம்
ஆன்மிகம் லௌகிகம்
ஒன்றின் வால் ஒன்றின் வாயில்
தட்டில் போட்ட பணத்தின் சத்தம்
தட்டியைத் தாண்டியதும்
கேள்வியாய் எழுந்து
இறைவனைக் கேட்டது
எது நீர்?
காய்ந்த வயிறா ஐம்பொன் சிலையா
***
No comments:
Post a Comment