உலக உருண்டை
என்னுடன் பிறந்தது
கருப்பைச் சுவரில்
உந்தி எழுந்தேன்
கட்புலன் ஆகாக் கோளம்
சுற்றிச் சுற்றிச் சுழன்றுவர
உதைத்து உருட்டித் தொலைவில்
உள்ளே விரிவைக் கூட்டியணைத்து
நான் செயும் சாகசம்
விரிபுள்ளியின் விளிம்பில்
புல்கும் ஆரக்கால்கள்
விடுபட்டு வடிவற்று விரைய எங்கும்
நுண்ணணுவின் நன்னடுவில்
நல்லால் இலை கிடந்து
நான் உறங்கும் காலம்வரை
***
No comments:
Post a Comment