Tuesday, October 26, 2021

நல்லால் இலை கிடந்து

உலக உருண்டை 
என்னுடன் பிறந்தது 
கருப்பைச் சுவரில் 
உந்தி எழுந்தேன் 
கட்புலன் ஆகாக் கோளம் 
சுற்றிச் சுற்றிச் சுழன்றுவர 
உதைத்து உருட்டித் தொலைவில் 
உள்ளே விரிவைக் கூட்டியணைத்து 
நான் செயும் சாகசம் 
விரிபுள்ளியின் விளிம்பில் 
புல்கும் ஆரக்கால்கள் 
விடுபட்டு வடிவற்று விரைய எங்கும் 
நுண்ணணுவின் நன்னடுவில் 
நல்லால் இலை கிடந்து 
நான் உறங்கும் காலம்வரை

***

No comments:

Post a Comment