Tuesday, October 26, 2021

காட்சியின் சொல்

கண் என்னும் கனி பிழிந்து 
கொட்டிய ரசக் காட்சி 
எண்ணத்தின் அமுதப் புனலை 
எங்கும் பரப்பி வைத்த பசும்பேழை 
பண்ணில் பயிர் செய்து 
பரவசமணி அறிந்து வைத்த 
பொற்குடங்கள் 
விண்ணை நெசவாக்கி 
வியனாடை ஓரத்தில் 
குங்குமம் தொட்டு வைத்த 
கோலப் பகல் 
காட்சியின் சொல் விடியக் 
கதிரெழுந்த கவிதை 

***

No comments:

Post a Comment