Sunday, October 31, 2021

குளிரில் போர்த்திய சிவன்

வழிநெடுக வெள்ளம் 
நெஞ்சங்களின் கனம் ஏற ஏறப் 
பேருந்து ஊர்ந்து சென்றது 
பாட்டியம்மையில் தொடங்கிய பயணம் 
பிரளயத்திற்கு அச்சாரம் ஆகியது 
காவிநீர்ப் பெருக்கின் 
சூறைக் காற்றில் 
உறவின் மரங்கள் 
மனஸ்தாப விறகுகள் ஆயின 
நம்பிக்கை விண்மீன்கள் 
ரேஷன்கடை பல்புகள் ஆகி 
யதார்த்தம் பேசின. 
கரைகட்டாக் காவிரி 
வீட்டுப் படிக்கட்டில் 
அலைகட்டி நின்றது 
முதுகில் சார்த்தி வைத்திருந்த 
பாச மூங்கில்கள் உலர்ந்து பற்றிக் கொண்டன 
கண்ணுக்குப் புலனாகாத 
உறவின் மின்சார இணைப்புகள் 
தம்முள் குறுக்கு வெட்டில் 
பாய்ந்து வெடித்தன 
குளிரில் நடுங்கியவனுக்குக் 
கொல்புலித்தோல் போர்த்திவிட்டுப் 
போன சிவன் எங்கே? 

*** 

No comments:

Post a Comment