Tuesday, October 26, 2021

இடம் காலம் என்ற ஓருரு

இருளின் ஈரக்கால்கள் 
இடத்தின் மெய்யெங்கும் பற்றி 
உணராத் தோலின் உள்வெளியெல்லாம் பரவக் 
கண்ணற்ற காட்சியின் கருமை 
தன்னைத் தானே காண்பொருட்டு நின்றது 
எண்ணற்ற ஒளிச்சுரும்புகள் அணுச்சாரலாய் 
மண்ணற்று விண்ணற்று கண்ணற்று 
எண்ணுமற்ற இடகால 
ஈருமிழைப் பந்தப் பின்னலூடு புக்கு 
இடம் காலம் என்ற ஈருரு இறுத்துக் 
கணத்தின் கண்விழி மையத்துள் 
காணாக் கூரிருளில் 
குவித்த உயிர்த்தொகையைக் 
கூறாக்காக் காலத்தே 
தன்னைத் தானறியத் தன்னில் வேறாய்த் 
தன்னின் புறத்தொன்றின்றித் தானே தனதாய்த் 
திதித்த ஒன்றில் 
திரை தத்தித் திரிந்த வேகம் 
கால முதுகோடேறி 
இடத்தின் விலா பற்றிக் 
கிளர்ந்தெழுந்த கோலம் இவ்வுலகம்.

***

No comments:

Post a Comment