தூங்காத விண்மீன்கள் இமைத் துணையாய்
மேல்மாடிக் காரை படுத்தயர்ந்த நிசப்தத்தில்
தெருக்கோடிக் குழந்தை தேம்பும் ஒலித்தெளிவில்
திப்பி பிதிர்ந்து இருள் புரளும் ஒளிக்கீற்றும்
ஓய்ந்துறங்கும் உள்ளிரவின் மடியேந்தி
உரத்த குரலாய் ஆர்த்த இதயத் துடிப்பு
உட்செவி சாய்ந்து உயிரில் கனவேறி
வெளியில் இவர்ந்து வந்த பதிவிறக்கிக்
கொட்டிக் கவிழ்த்துக் கிளறிப் புரட்டிக்
கூடாக் கூட்டில் கொண்டு புலர்த்திச்
சிறுசிறு கனவுத் தூள்கள் உருட்டி
இருளின் மடி கனத்த கடையாமம்
உயிரூற உணர்வெழுந்து உரத்த விழிப்பில்
ஊர்துயின்ற தாலாட்டில் ஊறிவரும்
காற்றின் முதுகேறிக்
கொள்ளிடத்துப் படித்துறையில்
கொண்டு சுழித்தோடிவரும்
குளிநீர் குடைந்தாடி
வெள்வரைப்பின் முன்னெழுந்த ஊரசைவில்
பட்டுவிடாது பாங்காய்த் திரும்பிவர
நின்றேனை நீளுலகு
நின்றறியக் கூவிடுமால்
பொற்சேவல்
***
No comments:
Post a Comment