நந்தவனத்தில் கீழ்க்கிடந்து துடித்ததென்று
கர்ச்சிப்பில் தூளிகட்டிக் கொண்டுவந்து
ஊர்க்கண்ணில் படாது
வீட்டில் எவரும் அறியாது
வாசல் படிக்கட்டு
மாடிப்புழை அருகே
சொகுசாக வைத்தேன்
பாற்சோறும் பழமும்
பசியறிந்து பரிமாறிப்
பக்குவமாய்க் கவனித்தேன்
பேசவைக்கப் பாடம்
பெருவார்த்தை ரங்க என
ஒரு தடவை சொல்லாதோ
ஓயாமல் கீயென்று
ஒண்சிவப்பு அலகால்
ஊரெல்லாம் பறந்துவர
உச்சியைப் பார்த்தது
உட்கூரை சுத்தும் என்று
ஒரு நிமிஷம் எடுத்து விட்டேன்
ஊர்க்கிளியாய் ஆனது
இன்றென்னைக் கேட்டால்
எந்தக் கிளி என்று தெரியாது
***
No comments:
Post a Comment