சந்நிதியில் கால் வைத்தேன்
சந்நத்தமாகி வந்த தெய்வம்
மலையேறிப் போயிற்று
மலையேறி நின்று விரி உலகைப்
பார்வையிலே மீன் பிடிக்க
முனைந்து சென்றேன்
பரிதி விரித்த கடை மூடி
வாயூதி விளக்கணைத்துப் போன புகை
இருளாய் எதிர் எங்கும் நிரவியது
இருளின் மச்சத்தை எங்கென்று தேடி
இடைசுற்றிக் கால் விலக்கிக் காணப் புக்கில்
கருக்கல் கடந்து ஒரு கருங்கடலில்
கொள்ளை ஒளிக்கதிர்க் கொழுந்து ஆடியது
கொழுந்தைக் கிள்ளிக் கொஞ்சம்
கருத்தில் வைத்தேன் அங்குக்
கொழுத்த சுடர்க்காட்டில்
மூன்று காலம் நின்றது
***
No comments:
Post a Comment