Wednesday, November 24, 2021

வடிந்த அரிப்பு

வட்டிக்கடை போட்டு விளங்கிய குடும்பம் 
வற்றித் தொத்தலாய் வாசல் குறட்டில் 
விதவித பட்டுப் புடவைகள் வெளுத்துக் 
கிழிந்து புரள வீதியில் 
நரைத்த தலைப்பிரட்டையில் 
வாழ்ந்த வாழ்வு ஓடும் பேனாய் 
வடிந்த வெள்ளம் விடுத்துச் சென்ற 
அரிப்பாய் அவள் 
வந்தவர் போனவர் வயிறாற 
வடித்துக் கொட்டிய கைகள் 
அடிவயிற்றில் அடித்து வாயில் 
வசவுகள் கொட்டும் 
அம்ம அம்ம என்று வாழ்ந்தவளிடம் 
கல்யாணம் கார்த்திகை என்று 
கையேந்திய கணக்கன் கெடுபிடி தாண்டிக் 
காலம் போகும் ஊர்க்குறடெங்கும் 
துயில்வதியும் நியாயங்கள் 
கண்மலரும் காலம்வரை 
வெள்ளங்கள் கரைமீறும் 
வடிந்த அரிப்பின் விளிம்பில் அமர்ந்து 
சாக்குருவி சுரம் போடும். 

***

No comments:

Post a Comment