Tuesday, November 23, 2021

தெருவில் மழையைத் தொடர்ந்து

எங்கள் ஊரில் மழை பொழிகிறது 
யாரும் வந்து விடாதீர்கள் 
நீரற்ற நிலத்திட்டில் மாடுகள் கூடிநிற்கும் 
நாயொன்று நாகரிகமாக நகர்ந்து 
நுழைந்து தயங்கிக் காத்து நின்று செல்கிறது 
மனிதன் பார்த்துப் பார்த்துக் 
கால் வைத்து நடக்கிறான் 
கார் ஒன்று வருகிறது 
மக்கள் தலைகளைச் சுமந்து 
சேறு என்ன சகதியென்ன 
சக்கரத்திற்கா தெரியும்? 
தெறித்த சேற்றில் 
பொறியெழும் மனிதரின் கோபம் 
மாடு வாலைச் சுழட்டுகிறது 
நாய் பதுங்கிக் கொள்கிறது 
விரைந்த காரின் குசுவாய்க் 
காதையறுக்கும் வல்லிசைக் கொட்டு 
மூடிநகர்ந்த தெரு சேற்றால் 
தன் மூக்கை மூடிக் கொள்கிறது. 

***

No comments:

Post a Comment