Thursday, November 18, 2021

விதியின் விக்ரகம்

ஆறுக்கு முன்பிருந்து 
அறுபதுக்குப் பின்வரையில் 
ஆதியோடந்தமாக 
அந்தாதி தானுமாக 
வேறுபட்ட வாழ்நிலைகள் 
வாழ்வெல்லை நூற்றுக்குள் 
அத்தனைக்கும் அடிக்கல் 
ஆறுக்கு முன்னேயே 
அமைக்குமுயிர் ஆரத்தின் 
ஆர்வலித்த உணர்ச்சிகளில் 
இத்தனையும் சொல்கின்றார் 
உள் இயல் ஆய்வாளர் 
ஆதலினால் ஆறுக்கு 
முன்பிருந்த நிலை சொன்னால் 
ஒரு நூறும் சொல்லியதாய் 
ஆகாதோ 
உருவான விதியின் விக்ரகமாய் 
வடிவான மனித உயிர்க்கதியும் 
கடைக்காலில் கற்பித்த இரகசியத்தைப் 
பதியும் இளமனத்தில் 
பதிவிருந்த சூட்சுமத்தைத் 
துதிகொள் குழந்தைமையில் 
தோய்ந்திருக்கக் காணீரோ! 

***

No comments:

Post a Comment