(திருப்பாவை முப்பதுக்கும் ரசித்து ஒரு ரசனைத் திருப்பாவையாகப் பாடிய முப்பது பாடல்கள் இவை. அதாவது அனைத்துப் பாடல்களிலும் ஆண்டாள் பற்றிய குறிப்பு, திருப்பாவையின் சிறப்பு, அதைக் கற்கத் தூண்டும் ரசனைக் குறிப்பு ஆகியன அமைந்து வரும்படியாக அமைந்திருப்பன. ஒவ்வொரு பாடலுக்கும் தலைப்பில் நகவளைவுக்குள் திருப்பாவையின் தொடக்க வரி தரப்பட்டிருக்கிறது)
*
1. (மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்)
மார்கழித் திங்கள் மதியத்தே மால்நினைந்து
ஆர்கழலைச் சிந்தித்து ஆண்டாள் திருப்பாவை*
2. (வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்கு)
வையத்து வாழாதே வெய்ய துயர்க்கடலில்
பையவே மாழாந்து புல்லும் கவலைக்கே*
3. (ஓங்கி யுலகளந்த உத்தமன் பேர்பாடி)
ஓங்கி யுலகளந்த உத்தமனார் சேவடிக்கே
தாங்கித் தமராக்கித் தான்செலுத்தும் தீந்தமிழாள்*
4. (ஆழிமழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல்)
ஆழி சுழற்றிடும் அச்சுதனை அன்பினால்
வாழ்வில் சுழற்றிய வான்கோதை பேசினாள்*
5. (மாயனை மன்னு வடமதுரை மைந்தனை)
மாயனைப் பாடியே மாதவனை நாம்பாடித்
தூயோமாய்ச் சேவித்தால் தண்ணளியும் தாரானோ*
6. (புள்ளும் சிலம்பினகாண் புள்ளைரையன் கோயில்)
புள்ளும் சிலம்பிற்றால் போதச் சிறகார்ந்து
கள்ளம் தவிர்ந்திங்குக் கண்ணனும் வாரானால்
குள்ளக் குளிரக் குடைந்துதிருப் பாவைக்கே
தெள்ளமுத விள்ளுரைகள் தீங்குரவோர் தாமியற்றிப்
பள்ள மடையாக்கிப் போந்தார்நம் நெஞ்சத்தை
விள்ளற் கரியனாம் வேதப் பெருமானும்
உள்ளம் கலந்தொளிர உற்றபொழு தாயிற்றால்
துள்ளி யெழுந்து தோய்ந்தேலோ ரெம்பாவாய்.
*
7. (கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து)
கீசுகீ சென்றுநம் உள்ளம் கிளுகிளுப்பப்
பேசுதிருப் பாவைப் பலபதியம் பார்த்தனையோ*
8. (கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு)
கீழ்வானம் வெள்வரைக்க கோவிந்தன் வாசற்கீழ்
ஆழ்ந்தோம் அருமறைகள் ஆண்டாள் அருள்செய்ய*
9. (தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய)
தூமணி மாடத்துக் கற்றுத் தெளிந்திடவே
தாமோ தரனார்க்குத் தக்க நெறியென்றே*
10. (நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்)
நோற்றுச் சுவர்க்கம் புகுந்தாலும் நாமினியும்
ஏற்ற அருந்துணையாய் ஈடன்ன பேருரைகள்*
11. (கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து)
கற்றுக் குரவர் குணங்கள் பலபொலிந்து
உற்றார் உவகைக்கே ஓதுதமிழ் வேதத்தில்*
12. (கனைத்திளம் கற்றெருமை கன்றுக் கிரங்கி)
கனைத்திளம் கற்றவர் கல்விக் கிரங்கி
நினைத்துளம் வீற்றெழில் நாரணர்க் காக்கும்
பனித்துடல் மெய்விதிர்ப்பப் பத்திமை செய்யும்
குனித்தவக் கோவலன் கொண்டிடச் செய்யும்
தனித்தவம் மாற்றித் திரள்விசும் பாற்றும்
வினைமுகம் பாற்றியே விண்ணெறி காட்டும்
மனத்துக் கினியநம் மாதவன் கோதை
புனைந்த தமிழ்மாலை போற்றுவோ மெம்பாவாய்.
*
13. (புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனை)
புள்ளின்வாய்க் கூற்றினில் பார்வண்ணம் கண்டெழுந்து
கள்ளம் தவிர்ந்துநீ கோதைமொழி கூறாயோ?
உள்ளம் புலர்ந்துநீ உத்தமனை நாடாயோ?
விள்ளற் கரியபொருள் விந்தையாம் பேருரைகள்
மெள்ள உனக்கே முயங்கித் திளைத்திடவோ?
தள்ளத் தகுமோ? தரணிவாழ வேண்டாமோ?
பிள்ளைப் படியுரைத்துப் பாருலகு தானுய்ய
மெள்ளப் புகன்று முழங்கேலோ ரெம்பாவாய்.
*
14. (உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்)
உங்கள் புழக்கத்தால் உள்ளத்துள் கோவிந்தன்
திங்கள் கதிர்முகம் தண்ணருள் செய்துநின்றே
எங்களை முன்னம் எழுப்பிடச் செய்தானால்
சங்கத் தமிழ்மாலை சூட்டும் சுடர்க்கோதை
துங்கப் பொருளுரைக்கும் தூயோர்தம் தெள்ளுரைகள்
அங்கப் பறைகொள்ளும் ஆர்வத்தால் வாசற்கண்
சங்கை அகற்றியே சேர்ந்தியாம் கற்பதற்கே
நங்களோ டுங்களை நாடிவந்தோ மெம்பாவாய்.
*
15. (எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ)
எல்லே இளம்நெஞ்சே! இன்னம் தயங்குதியோ
அல்லல் படுவதுமேன் ஆன்றோர் உரையுளவே
வல்லையுன் கற்பனைகள் வாலறிவும் யாமறிதும்
வல்லீர்நும் பேருரையில் யானேதான் ஆழ்ந்திடுக
ஒல்லைநீ இவ்வுலகிற் கோதாமல் உந்தனக்கோ
எல்லாரும் தோய்வாரோ தோய்வார்தாம் தோய்ந்தறிய
வல்லானை ஆழ்வார்கள் வாழ்வான விண்ணாண்டாள்
நல்லானை நம்பியைநாம் பாடேலோ ரெம்பாவாய்
*
16. (நாயகனாய் நின்றநந்த கோப னுடைய)
*
17. (அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்)
எம்பிரான் தாளிணையில் என்றுமே காதலாகிச்
செம்புலத்துப் பெய்நீராய்ச் சேர்ந்தென்றும் ஒன்றிவாழும்
அம்புலத்துக் கான்றவழி ஆண்டாள் தகவுரைத்தாள்;
நம்பிகாள் நங்கைமீர்காள் நாடுமினோ நல்லுரைகள்;
நம்பரும் நன்மையெலாம் நானிலம் காணலாகும்
வம்புலாம் சீர்திகழ வாழ்த்தேலோ ரெம்பாவாய்.*
18 (உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்)
*
19. (குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்)
*
20 (முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று)
*
21 (ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப)
*
22. (அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான)
அங்கண்மா கர்வத் தகங்காரம் விட்டகன்று
*
23. (மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்)
சீரிய சிங்கா தனமாம் திருப்பாவைப்
*
24. (அன்றிவ் வுலக மளந்தா யடிபோற்றி)
*
25. (ஒருத்தி மகனாய்ப் பிறந்தோ ரிரவில்)
*
26. (மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்)
*
27. (கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்றன்னைப்)
பாடும் அகச்செவியின் பூவாகிப் பேருரைகள்
ஆடும் பொருளாழம் ஆடையும் பாற்சோறும்
மூடுநெய் தோய முழங்கேலோ ரெம்பாவாய்.*
28. (கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம்)
*
29. (சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்)
*
30. (வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்)
வங்கக் கடல்கிளர்ந்த மாவுரைகள் காட்டுபொருள்
* * *
திருப்பாவை முப்பதில் தீந்தமிழால் வீடும்
அருள்பாவை போற்றிப் புனைந்தேன் - மருள்தீர
மார்கழியில் ஆண்டாளம் மாதவனை மன்னியசீர்
ஆரமுதப் பாவின் அருள்.
***
No comments:
Post a Comment