Thursday, November 4, 2021

வினை ஊதும் பொன்வண்டு

மரக்குதிரை கால் ஒடிய 
மனக்குதிரை சிறகு முளைத்துத் 
தினத்தீவுகள் தாண்டி 
உருளும் திங்கள் திருச்சுற்றில் 
துணைதேடிக் கூரை ஊதும் கருவண்டு 
வீசும் சிறகில் 
விரைவுப் பளிங்காய் 
வெயில் வானம் 
வினை ஓய்ந்து 
மையிருள் கூட்டில் மடங்கி 
மாகடல் எழும் வையம் நிரந்து 
வினை ஊதும் பொன் வண்டின் 
பக்கம் உரசிப் பறந்தது 
பங்குனித் திங்கள் சேர்த்தியில் 

***

No comments:

Post a Comment