Wednesday, November 24, 2021

கட்டுடைதல்

எல்லாம் சடமாகக் கட்டுடைந்து இருக்கிறது 
சில அப்படியே சில இன்னும் மெருகுடன் 
சூட்சுமமாய்ச் சுதந்திரம் போல் 
சுயத்தின் சாயப்பழுப்பின்னும் கரையாமல் 
கல் மண் காற்று தீ உடம்பு வெளி 
உள்ளம் மனம் எண்ணம் புத்தி 
எல்லாம் சடமான சுயத்தைச் 
சைதன்ய வேஷத்தில் சங்கமமாய்ச் 
சலன வர்த்தமான சம்ஸ்காரமாய் 
அம்ருதத்தின் கதிர்நாக் கொழுந்தின் யோனிக்கீற்று 
அந்தரத்தில் அகண்டத்தின் வேர்பிடித்துக் 
கண்டத்தின் அந்தத்துள் பாய்வது போல் 
நின்று ஒளிர்வதென நிமிரவதன் 
கொழுமுனையை நக்கி மனம் 
தீத்திப்பெனக் களித்த தோய்வு 
தொடரும் நிலையாய்ப் பரந்து 
பிலிற்றும் சுகத் துவட்டாய் 
ஒட்டவைத்த தீபமாய் 
உருக்கரந்து ஒளியுமுனம் 
உள்பரப்பின் புனல் பாய்வில் 
உருத்தட்டும் முதல் சாட்டியமாய் 
அகம் எழுந்து ஆடாமுன் 
நான் நின்று நிலைக்குங்கால் 

***

No comments:

Post a Comment