Wednesday, November 10, 2021

சொல் இறந்த நிலை

மனிதர்கள் இன்னும் 
இறந்த சொல்லை உண்பவராய் 
இருக்கின்றனர் ஆதி காலத்தில் 
இறந்த சொல் 
புதுப்புது உருவங்களில் 
பரிணாமம் கொள்ள 
மற்றவர் சொன்னதை 
அவருக்கவர் சொன்னதை 
அவருக்கு யாரோ சொன்னதை 
வைத்து வைத்து ஊறப்போட்டு 
உண்பவராய் இருக்கும் மனிதர் 
சொந்தத்தில் சொல்லிச் சுடரெழுப்பிச் 
சொல்லை மீட்டுயிர்க்கச் செய்யுங்கள் 
உயிர்ச் சொல் 
சொல்லிறந்த நிலைக்குச் 
சுழலேணி ஆகச் 
சொல்லில் உயிர்ப்பாய்ச் 
சொல்லால் உயிர்த்துச் 
சையோகம் கொள்ளுங்கள் 
வையம் வாழ என்று. 

***

No comments:

Post a Comment