Tuesday, November 23, 2021

பசுமாடு

எங்கள் வீட்டுப் பசுமாடு 
தெருமுனையில் வருகிறது 
நாங்கள் வாங்கியதன்று 
தினம் வந்து எங்கள் வீட்டில் கறந்து 
ஊற்றும் பால்காரியின் மாடு 
அதன் கண்ணுக்குட்டிதான் எனக்குச் சிநேகம் 
ஏனோ மாடு எங்கள் நட்பை மெச்சவில்லை 
நான் பக்கத்தில் போனால் 
கொம்பை ஆட்டும் 
கன்றுக்குட்டி என்பக்கம் வந்தால் 
வெறிக்கும் பதறும் 
தள்ளி நின்றால் சாணி கழியும் 
சிறுநீர் கொட்டும் 
அதன் சாணியைக் கண்டால் பிடிப்பதில்லை 
ஆனால் பல முதியோருக்குப் பிடித்திருக்கிறது 
ஒரு நாள் இரண்டு நாள் 
மாடு வரவில்லை கைப்பால்தான் 
கன்று இறந்து விட்டதாம் 
சரியாய்க் கறக்கவில்லை 
இன்னும் மூன்று நாள் கழித்துப் 
பசுமாடு வந்தது கன்றுபோல் ஒன்றுடன் 
கட்டிவைத்த மாடு பசுபோல் நின்றது 
கொம்பை ஆட்டவில்லை 
கண்ணுக்குக் கீழே நின்ற கன்றைப் பார்த்து 
பசு என்னையும் பார்த்தது 
கன்றைத் தொட்டேன். சீறவில்லை 
மாட்டைத் தயங்கித் தொட்டுத் 
தடவிக் கொடுத்தேன் 
தலையை நீட்டி அரைக்கண் மூடியபடிக் காட்டியது 
கடைக்கண்ணில் ஒரு துளி உருண்டு விழாமல் ... 

***

No comments:

Post a Comment