எரிமலைக் குழம்புகள்
வெளியில் பொங்கிக்கொண்டு
பசுமைகள் உள்ளே
புகைந்து கருகிக்கொண்டு
உலகம் தலைகீழாய்ச் சுழல்கிறது
உள்ளே உருண்டு கொண்டும்
வெளியே மருண்டு கொண்டும்
உலகம் தலைகீழாய்ச் சுழல்கிறது
தன் கால்களில் கத்தியைச் சொருகி
அழிவினின்றும் தன்னைக் காக்கும்
ஓஸோன் குப்பாயத்தில் ஓட்டை போட
உலகம் அழியத் தொடங்கிவிட்டதோ
திருந்தாதோ உலகம்
ஈர நெஞ்சைப் பிழிந்தாலும்
ஆன்மா சிதையேறுமோ
நம்பிக்கையால் பொத்தி அணைத்தாலும்
தீ அணையாதோ
அழியத் தொடங்கிவிட்டதோ உலகம்
தெளிந்து திருந்தாதோ ...
***
No comments:
Post a Comment