கோலப் புதுமையும்
முன்பின்னாக ஒரு நூலாய்
முழுதும் படித்து முடித்த பின்னர்
முதல் அத்யாயம் தொடங்கிடுமோ?
முற்றும் என்று வந்திடுமோ?
பற்றும் அகன்று
பக்கம் கழன்று
தனித்தனியாகப் பிரிந்திடுமேல்
தேடித் திரட்டித்
தொகுத்தொரு நூலாய்த்
தொடுக்கும் தத்துவம் தொடர்ந்திடுமோ?
***
No comments:
Post a Comment