காற்றும் மண்ணும் விண்ணும்
தீயும் நீரும்
நிம்மதியாய்ப் பெருமூச்சு விடுகின்றன
நாய் ஒன்று
நடுவானுக்குத் தந்தி கொடுக்கிறது
நிலவோடு மரத்திலைகள் சிணுங்குவதைக்
கீரிப்பிள்ளை இரசித்துவிட்டுப் போகிறது
எங்காவது ஓரமாகப்
படுத்து அசைபோடத்
தெருமாடு பொறுமையாக
இடம் தேடிச் செல்கிறது
என்றோ ஓடிய இரயின் ஆவி
இன்றும் சரியாக
நேரத்திற்குக் கூவிக்கொண்டு போகிறது.
***
No comments:
Post a Comment