கோபுரம் உயர்ந்திருக்கிறது
கொள்கை சூழ்ந்த
கருவறைக் கொலுவில்
கடவுள் வீற்றுக் காண்கிறது
திறந்த வெளியை
திரைக்கடலை
மண்மேல் பிறந்து
தன்போல் வளர்ந்து
திசைமாறிப் போன மனிதரை
தனக்குப் பிடித்த வடிவும் தன்மையும்
தான் வணங்கும் தெய்வத்துக்காக்கி
தெய்வத்திற்குகந்த வாழ்வை நூல்களில் ஆக்கி
எய்தும் நிலையை மறந்து
வைய வாழ்வில் தொய்வை ஆக்கித்
திசைமாறிப் போன மனிதர்
திரும்புவார் என்று காத்திருக்கிறது.
***
No comments:
Post a Comment