கரைந்தே உலகைக் காக்கச் சென்றன
மணல் உடுத்திய துணியாய்த்
தொடர்ந்த ஆற்றில் மீன்கள்
ஆழம் தேடின
விண்மீன் வியந்து விளங்கிய பசும்புல்
கோரை கொக்கரிக்கப் பதில் தரவில்லை
கொண்டவன் காவியில் காசிவாசி ஆகிட
ஊர்வம்பின் கொள்ளிடமாய்
உருக்குலைந்தவளின் குறிப்பற்ற பார்வையில்
கோணிச் சரிந்தது கூனல் பிறை
ஆனை படுத்து அகன்ற மடுவில்
மீனாய்த் துள்ளிய பிள்ளைக் களிப்பில்
ஆற்றின் மேலே அகழ்ந்த குழியில்
பள்ளி கொண்டவன் மஞ்சனமாடத்
தெளிநீர் மொண்ட தாமரம் சிரிக்கப்
பொழுது சாயும்வரையில்
பொதியின் கவலையற்றுக் களி மீக்கூர
நகையாடிய நரைவெண் கழுதை
***
No comments:
Post a Comment