Wednesday, November 24, 2021

எந்தை வேணு

பாருணர வடிவீந்தும் 
பாரதியில் உணர்வு தந்தும் 
ஊக்கமுடன் உவப்புடனே 
ஷேக்ஸ்பியரில் சிறக்கவைத்தும் 
உள்ளிருக்கும் திறமைகளை 
உற்றறிந்தே வெளிக்கொணர்ந்தும் 
முள்ளிருக்கும் வழியகற்றி 
மூடியவாயில் தாழகற்றி 
நள்ளிருளில் நேரொளியாய் 
நயமாக வழிநடத்திச் 
சுயமாகச் சிந்தனையில் 
நான் வளர நீ மகிழ்ந்தாய் 
ஊன் வளர உணவீந்தாய் 
உணர்வு வளர நீ உவந்தாய் 
தாய்க்கும் தாயாகித் 
தந்தையிலும் தோழனாகி 
எந்தையென என்நெஞ்சில் 
என்றும் நிலை கொண்ட வேணு 
இன்றும் உனை வியந்தே 
வணங்கி நிற்பேன் வாழி.

***

No comments:

Post a Comment