மரங்கள் அடைகாக்கும்
இருள் முட்டை
ஆதிகால அந்தகாரத்தைக்
கதிரும் மதியும்
மாற்றி மாற்றி மாற்ற நினைக்கும் காலம்
எழுத்து புதிய கண்டுபிடிப்பு
சொல்
ஒலி அச்சில் ஊற்றிச்
செவி உணரும் ஏடு
நூல் இல்லை
அடையாள அட்டை, ஆண்டுச் சந்தா
அடுக்கி வைத்த கைம்மொழிகள்
படிக்கப் பார்க்கப் புரட்ட
ஏதுமில்லை. என் செய்வது?
எதை மேற்கோள் காட்டுவது?
எப்படி ஒரு கருத்தை எடுத்துச் சொல்வது?
சொல்.. சொல்.. சொல்..
சொன்னால்..
சொல்லிப் பார்
சொல்லத் தொடங்கினால்
இது என்ன?
திடும் என மௌனம்
விழித்துக் கொண்டேன்
ஒப்புவித்தல் போட்டி நடக்கிறது.
***
No comments:
Post a Comment