குட்டிச்சுவர்கள் நெடுங்காலம் மறைவதில்லை
வக்கணையாய்க் காப்பாற்றும் வயலும்
வறண்டு விடுகிறது
குட்டிச்சுவரில் முளைத்த செடி
காலத்திற்கும் நிற்கிறது
வெளிக்கரையில் வந்து விழும் கால அலை
வழித்தெடுத்த வடிவுக்கு அப்பால்
வானத்தில் விரைந்து
வற்றும்
விமானப் புள்ளி
வடிவற்ற ஓசையாய்.
***
No comments:
Post a Comment