Tuesday, November 23, 2021

வாய்மொழியின் பைங்கிளி

வரலாற்றின் முன் தொடங்கி 
வருகின்ற ஆற்றின் 
கரைதுயிலும் சோலைகளில் 
தூங்காமல் ஒரு கிளி கத்தும் 
தொல்பழங் காலத்துத் 
தர்மவர்மன் ஆட்சியிலே 
தழைத்திருந்த வில்வம் பழம் உருட்டித் 
தொலையாத காலமெல்லாம் 
சூழ்ந்து துயில் அறியும் புண்ணியத்தைக் 
காவிரியின் கரையுழவர் 
கண்டுமுதல் செய்கின்ற 
நன்செய்ப் பயனதனைச் 
சீயபுர மூதாட்டி 
கூப்பிட்ட குரல்வாங்கி 
விளக்குப் பிச்சனார் 
வாய்கடித்த பழங்கொறித்து 
வண்ணான் கைவண்ணம் 
உலராடை மீதமர்ந்து 
வண்ணமுற மிழற்றுமால் 
வாய்மொழியின் பைங்கிளியே. 

***

No comments:

Post a Comment