விளைச்சல் மலைமலையாய்
முற்றம் நிறைத்தது
நில்லாது குவியும் நீள்போகம்
தமதென்ற நினைவை விட்டார்
பஞ்சம் பிழைக்க வந்த
பரதேசி கையேந்த
அவனுக்கே ஒற்றி வைத்து
அவன் பார்த்துப் படியளக்கத்
தம் வயலில்
தம் முன்னோர் தமதுழைப்பில்
தாம் கண்ட மகசூலில்
தமது என்ற நினைவு விட்ட
தரித்திரமே மிஞ்சத்
தொய்வாகி நிற்கின்றார் தொல்லை
***
No comments:
Post a Comment