Wednesday, November 10, 2021

ஈன்று புறந்தரும் கவிஞன்

காட்சியிலே கலந்தவரை 
யாரென்று தெரியாமல் 
அவர் தந்த சூல் கொண்டு 
ஈன்றெடுத்துக் 
கூடிவரும் போதெல்லாம் 
பிரசவித்துப் பார்த்திடினும் 
கன்னிதான் கவிஞன் 
கண்காணா காரணத்தில் 
கருத்தின் நிறையழிந்து 
சொற்கரும்பு பிலிர்க்கும் 
ஒளிரசம் உள்வாங்கிக் 
கற்பனைக் குடல்விளங்கக் 
கஜப்பிரசவமோ கணப்பிரசவமோ 
தோன்று கவிதை 
எடுத்துரைக்கும் போதெல்லாம் 
ஈன்று புறந்தந்த 
ஈடில்லா ஆயாசம் 
கூடிவரும் தன்மை 
கொண்டவனே கவிஞன் 

***

No comments:

Post a Comment