Wednesday, November 3, 2021

சிவனிரவு

ரயில்பாதை 
நெடுஞ்சாலை 
பரிசல் 
மனித கவனத்தின் முப்புரியாய் 
மூண்ட பெருவழியில் 
தொலைவில் 
சிவனிரவில் 
நள்ளிரவுப் பையிருளில் 
நாகமணி விண்மீன் 
உமிழ் ஒற்றைக் கதிரில் 
மாந்தோப்புக்குள்ளே 
ஒரு மண் தரையில் 
விறகடுக்கி வெந்தழலின் விதிர்நாவில் 
சித்தின் சிலாம்பூட்டிச் 
சிவணும் கதகதப்பில் 
சிவிறும் சொல்மடக்கி 
இருட்திரையில் ஒளி நா 
ஒத்தி எழுதுகின்ற 
உருவம் கரையாமுன் உள்வாங்கி 
மன இடுக்கில் 
சொருகி வைத்த உருப்படிவம் 
சுயமாகச் சுடர்காலச் 
சருகேறி ஊர்ந்துவரும் 
சிறுகால் சாந்தத்தின் 
புருவக் குறுவெயர்ப்பைப் படிந்தாற்றி 
வைகறையின் வரும்வழியை 
முறைவாசல் செய்ய 
முந்துற்றுப் போயினதால் மீண்டு 

***

No comments:

Post a Comment