ஆட்டுக்காலில் அ ஆவன்னாவைப்
போட்டு ஆட்டியவாறே
மதில் மேல் குருவிகள்
ஆறடிச் சந்தில்
பாடம் பண்ணி வைத்த காலத்தின்
பக்குவம் சொல்லிய காக்கைகள்
பன்றியின் தணிக்கை உறுமலைக்
கவனியாதது போல்
காலைக் கொதித்துப் பகலாகி
மாலை வடிந்த நிழலில்
படிந்த தூவல்
***
No comments:
Post a Comment