Thursday, November 18, 2021

ஆதியில் பரிசுத்தமாய் இருந்தது

ஆதியில் நான் 
பரிசுத்தனாய் இருந்தேன் 
அண்டத்தின் ஆதி அன்று 
இந்தப் பிறவியின் ஆதி 
சிறகு அடிக்கடி விரிய 
என் பாதங்கள் கீழே 
வான் விரைந்து செல்லும் 
சன்னலோரத்துச் சிறு மேடையில் 
கதவில் சாய்ந்து நான் 
சாயங்காலத்தின் இரசிகனாக 
ந்டுப்பகலின் நாயகனாக 
விடுமுறை நாட்களின் 
இளங்காலை ஏந்தலாக 
மாறும் பொழுதெல்லாம் 
என்னிலிருந்து ஓர் களிப்புனல் கசியும் 
வாழ்க்கையே இந்த வேக மகிழ்வின் விகசிப்பு 
என்றிருந்த காலத்தில் ஒரு நாள் 
அசிங்கம் என்ற அளவுமுள் துடிக்க 
ஆண்குறியைத் தொட்டேன் 
சமுதாயத்தின் மின்சாரம் தாக்கியது 
தலையில் மின் தாக்கும் 
ஓர் இன்பப் புயலை எழுப்பத் 
தலையை நிமிர்ந்து பார்த்தால் 
மாடிச் சுவருக்குப் பின்னிருந்து 
பின்னல் சுவரின் மீது தொங்கியபடி 
ஆசைக் கண்கள் 
உண்ணும் பொருள் போல் 
சுவை இல்லையெனினும் 
ஊறும் இன்பத்தில் உலகம் சுருங்கியது 
உலகம் மீண்டும் விரிவடைய 
உடல் அடங்கி 
உள்ளம் ஓடிப்போய்த் தனியே நின்று 
கள்ளப் புலம்பல் தொடங்கியது 
வானத்தின் விட்டம் இடிந்து விழுந்து 
சிறகுகள் ஒடிந்து சக்திகள் 
விழுந்த உத்திரத்தின் அடியில் 
அழுந்திக் கிடந்தன 
நடக்கக் கூடாதது நடந்துவிட்டதென 
நரநரவென்று வெறுப்பு கொட்டியது 
வழக்குத் தீர்ப்பதற்கு ஆற்றல் 
ஆடி ஆடிச் சோர்ந்தது 
கீழின் அடியாழத்தில் நான் 
தப்பிச் செல்ல வழியின்றித் 
தலையைத் தூக்கி உயர்த்தி எங்கும் 
பரப்பாக வான் மேலே 
பிராயச்சித்தமும் மிருதிகளும் 
பாவமும் மன்னிப்பும் பரிதவிப்பும் 
குற்ற உணர்வும் குமைச்சலும் 
தன் கழிவிரங்கலும் உடைத்துக்கொண்டு 
எங்கும் வழிந்து குட்டையாகிச் 
சமுதாய உறுமலும் 
அடக்குமுறைத் தவளைச் சத்தமும் 
குழந்தை முட்டை பொரிந்து 
மனிதன் எழுந்த பூகம்பம் 

***

No comments:

Post a Comment