வாசலில் கட்டில் போட்டமர்ந்தேன்
வளைய வந்த பூங்காற்று நாணிக்கொண்டு
வாரிச் சுருட்டி ஓடியது
சரி வரட்டும் என்று
விசிறியால் வீசினேன்
சந்தர்ப்பம் தெரியாமல்
சிரித்து வைத்தது அணிற்பிள்ளை
கூடச் சேர்ந்து பேருக்குச் சிரித்துவிட்டுக்
கூரை வானில் ஓட்டைகள்
எண்ணிப் படுத்திருந்தேன்
குவலயத்தில் மக்கள் பேசும் கதைகளெல்லாம்
ஆவியாகி மேலே சென்று திரிவதுபோல்
அதற்கப்பால் புராணமாகி வருவதுபோல்
மேகம் கருத்து வந்து தூறல் போட்டது
வாரிச் சுருட்டி உள்ளே
கட்டிலைப் போட்டேன்
வானம் தெளிவடையப் பழையபடி
வளைய வந்ததந்தப் பூங்காற்று
***
No comments:
Post a Comment