உணர்ந்து ஓர்ந்து ஊருக்குச் சொல்லி
வாழ்க்கையில் கண்ட கவியின்
பெருமை சாற்றித்
தன் நெஞ்சறிந்ததை
வஞ்சனையின்றிச் சொல்லிய பின்
இனி அதை ஏந்தி
ஏற்ற இடத்தில் வகுக்குமோ
வகுக்காதோ உலகின் இயல்பு
முன்னே போல் இல்லை
இப்பொழுது நிரம்பவும் அதிகம்
பின்னே ஒரு வேளை வரலாம்
இப்பொழுதைக்கு இல்லை
பிறகு பார்த்துக்கொள்வோம்
இப்பொழுதைக்குப் போதும்
முன்னே பின்னே இப்பொழுது
இவ்வளவுதான் இருக்கின்றன
இதற்குள்ளேதான் வதக்க வேண்டும்
வார்த்தைகளை ஊற்றி
வாழ்வின் அனுபவச் சட்டியில்
மனநிறம் வரும் வரையில்
***
No comments:
Post a Comment