அழகிய வீடு கைபுகுரப்
பூட்டிய வாயில் திறந்து உள் நுழையப்
பத்திரப்பதிவுப் பத்ததி இன்னும் முடியாமல்
கொல்லைப்படலை ஒதுக்கிப் புகுந்து
தூசியில் சயனம் கொண்டவன் கனவில்
முற்ற மர நீழல் பந்தர்க் கட்டில்
மடித்துப் போடும் இனிமைப் புறந்தடவி
மொழிச்சுண்ணம் சிவந்த
நினைவின் உள்நா
நீளும் இதழ் வெளி நிர்மல வானம்.
***
No comments:
Post a Comment