Wednesday, November 10, 2021

மகிழ்ச்சியின் புதிர்

மனத்தைக் கடந்த நிலையில் 
எல்லையில்லா ஆனந்தம் 
கொட்டிக் கிடக்குதென்று 
சொல் இறந்த மொழியில் 
சொன்னதை ஏற்கும் நெஞ்சம் 
மனிதராய்ப் பிறந்த நீங்கள் 
மகிழ்ச்சியை 
மனத்தால் வாக்கால் செயலால் 
செயித்துச் சாதித்தல் 
வாழ்வின் இயல்பு என்று 
உணர்ந்தவன் உரைத்ததைக் 
கேட்டும் செவிடாய்ப் 
பதிலற்ற ஊமையாய்ப் 
புதிர்போல் புரியாது 
விழிப்பதும் ஏனோ? 

***

No comments:

Post a Comment