எவ்விடத்தும் உட்புகுந்து வந்துவிடும்
ஆனால் அவற்றையெல்லாம்
சுமந்து வந்து நிற்காது
கவிதை உள்ளம் ஓர் ஒளிப்பிழம்பு
ஒற்றிப் படிந்த பொருள் துலக்கிப்
பொன்றும் இருள் கடிந்து
பொற்காட்சி விரிக்குமன்றிப்
பொருளாய்த் தான் மாறிப் பொன்றாது
கவிதை உள்ளம் ஒரு வான்
அனைத்தும் அதில் அடங்கும்
அனைத்திலும் அஃது இருக்கும்
ஆனால் அஃது மற்றொன்றாய் ஆவதில்லை
ஆகவும் முடியாது
ஆனாலோ மற்றெதுவும் இருக்காது
கவிதை ஒரு தீ
திறலனைத்தும் திளைத்தெழும் ஆணிவேர்
திரண்ட பொருள் வர்க்கத் திகழ்வுக்கு மூலவிசை
தரணிக்கே உள்ளோட்டம்
என்றாலும்
தீயின் இயல்பு மாறிப்
பருப்பொருளாய் ஆன கதை
பாரில் புராணத்தில் பகுத்தறிவில்
எங்கும் பயின்றதில்லை.
***
No comments:
Post a Comment